tamilnadu epaper

தந்தையை விஞ்சியத் தனையன்.!

தந்தையை விஞ்சியத் தனையன்.!


கங்கை கொண்டச் சோழபுரம் ஔிவிளக்கொளியில் பிரகாசித்தது. ஆதித்தப் பரந்தாகச் சோழன் வழிவந்தவன்.. இராஜ இராஜ சோழனின் அரும் மைந்தன் வாரீசான சோழப் பேரரசின் மாமன்னன் இராஜேந்திர சோழன் தலைநகராம் கங்கை கொண்ட சோழபுரம் வருகின்றான். அரண்மனையில் இருந்து வழி நெடுகிலும் வரவேற்ப்புத் தோரணங்கள்.. வான வேடிக்கைகள்.. ஒயிலாட்டம்.. மயிலாட்டம் அமர்க்களமாக நடக்கின்றது.


மக்களின் மனம் கவர்ந்த மாமன்னன் கங்கை கொண்டான் வாழ்க.! வாழ்க.! என்று புலவர்கள் வாழ்த்துப் பாடினர். பொதுமக்கள் மகிழ்ந்து கொண்டாடினர்.


இரண்டு நாட்களுக்கு முன்னரே பட்டத்து ராணி ஆடை அணிகலன் அலங்காரங்களோடு உற்சாகமாக வலம் வந்தாள்.


தங்கை குந்தவை தேவி பட்டத்து ராணியுடன் சோழபுரம் கோவிலை சுற்றி வருகின்றாள்.


இரஜராஜ சோழன் மறைவுக்குப் பிறகு.. இராஜேந்திர சோழன் பதவி ஏற்றான்.


அகன்டு பரந்த சோழ ராஜியத்தை விரிவுப் படுத்தினான். தந்தையைப் போல் தரணி ஆண்டான். மக்கள் மனங்களை வென்றான். நல்லாட்சி நடத்துகின்றான்.


மந்திரி பழுவேட்ராயர்.. சேனாதிபதி விஜந்திர சோழன்.. புலவர்கள் புரவலர்கள்.. பாணர்கள்.. படைவீரர்கள் மகிழ்வோடு துணிவோடு.. மாமன்னன் ஆட்சியிலே துணைநிற்கின்றனர்.


இராஜேந்திர சோழனுக்கு ஒரு கனவு இருந்தது. தந்தை கடல் கடந்து சோழ ராஜியத்தை கடலோடி திரைகடந்து கொடி ஏற்றினான். 


தந்தைக்கு ஏற்ற மகனாக இராஜேந்திர சோழன் தந்தையின் பாதையில் பாசரையில் படைக்கருவிகள் குவித்தான். சோழ அரசை விரிவாக்கினான். 

இலங்கை.. கடாரம்.. கடந்தும் புகழ்க்கொடி ஏற்றினான். 


ஆயினும் அவனுக்கு ஒரு கனவு இருந்தது.

தந்தை இராஜராஜ சோழன் தஞ்சைமாநகரிலே காவிரிக் கரைதனிலே பெரிய கோவிலை எழுப்பினான். உலகமே வியக்கும் வகையில்.. பிரமாண்டமான கோபுரம் எழுப்பினான்.. சிவலிங்க வடிவத்தில் மிகப் பெரியது.. ஒரேக்கல்லில் ஆனது. நந்தியோ ஆகச்சிறந்த சிற்பிகளைக் கொண்டு மிகப் பெரிய வடிவில் எழுந்தது. தேவாரம் ஓலைச் சுவடிகளை ஒன்று சேர்த்து.. நம்பியாண்டார் நம்பி வாயிலாக தேவாரம் என்ற பக்திப் பனுவலை உலகிற்கே அர்ப்பணித்தான்.


மகன் இராஜேந்திர சோழன்.. தந்தையை விஞ்சியத் திறனாளன். தஞ்சாவூர் பெரிய கோவிலைப் போலவே தான் ஆளும் தலைநகரமாம் சோழ புரத்தில் ஒரு பிரமாண்ட சிவாலயத்தை எழுப்பியுள்ளான். 

வடக்கே சென்று கங்கை நதியிலிருந்து நீர் எடுத்து.. அதனை இமயமலைப்பகுதி ஆளும் மன்னர்களை படையெடுத்து வென்று கங்கை நீர் குடத்தை.. கற்குவியல்களை அவர்களைச் சுமக்க வைத்து.. கங்கை கொண்ட சோழபுரம் வரை கொண்டு வந்தான். அதனாலே கங்கை கொண்டான் என்ற பட்டப் பெயர்ப் பெற்றான்.


அந்த சிவனாலயத்தின் குடமுழுக்கு விழா.. இதோ நாளை விடிகாலை நடக்கின்றது.


சாஸ்திரங்கள் திருமறைகள் தேவாரம் ஒலிக்கின்றது.


யாக சாலைகள்.. மறையவர் வேதம்ஓத.. யாகங்கள் வளர்தான்.


சிவாச்சாரியர்கள் தேவாரப் பதிகம் பாடினர். 


மந்திரி பழுவேட்டையர் மன்னவன் ராஜராஜனோடு பேசிக் கொண்டிருந்தார். மந்திரிகள் சூழ கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் நின்றபடி குடமுழுக்கு வேலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.


மந்திரி பழுவேட்டடையார் கிழவர் அவன் தந்தை இராஜராஜன் காலத்தவர். அவர் பணிவோடு இராஜேந்திர சோழனைப் பார்த்தார்.. மன்னவரே ஓர் ஐயம்.. இந்த திருக்கோவில் இங்கே கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுப்பியுள்ளீர். திருக்கோவிலோ அந்த தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலவே இருக்கிறது. ஆனால்... 


என்ன ஆனால் என்று இழுக்கிறீர்களே.. என்றான் இராஜேந்திரன்.


மன்னவா இக்கோவில் தஞ்சைக் கோவிலைப் போல்தான் இருக்கிறது. ஆயினும் கோபுரம்.. மூர்த்தி.. லிங்கம்.. நந்தி அளவில் சிறிதாக அமைத்தது ஏன்?..


மந்திரியாரே.. உங்கள் கேள்விக்கு இதோ என் பதில்.. நான் இன்று சோழப் பேரரசன். படையிலே.. செல்வத்திலே.. பரப்பிலே மிகப் பெரியவன். ஆயினும் என் தந்தை இராஜராஜனுக்கு முன் மிக சிறியவன். 

எனது வீரம் ஞானம் ஆளும்திறன் யாவும் எம் தந்தை தந்தது. கொடை.

என்னதான் யான் செல்வாக்குப் பெற்றிருந்தாலும்.. நான் அவருக்கு மகன். அவர் பெரியவர். நான் சிறியவன். 

மகன் தந்தைக்கு முன் வளர்ந்தாலும்.. என்றுமே மகன் மகன்தான். தந்தைக்கு விஞ்சியவன் மகன் என்றாலும்.. அடக்கமே அவனுக்குப் பெருமை தரும்.


நான் என்தந்தையின் பெயருக்கும் புகழுக்கும் தொண்டிற்கும்.. முன் என்றென்றும் சிறியவன். என்பதாலே..

நான் கட்டியுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும்.. கோபுரமும்.. சிவலிங்கமும்.. நந்தியும் சிறிய வடிவிலே அமைக்க ஆணையிட்டேன். அதுவே இங்கு நீங்கள் காணும் காட்சி என்றான் சோழ மன்னன் பேரரசன் இராஜேந்திர சோழன். பெருமிதத்தோடு மந்திரி பழுவேட்டையார் மாமன்னனை பார்த்து வணங்கி நின்றார். 

வாழ்க சோழப் பேரரசன்! வாழ்க மாமன்னன் கங்கை கொண்டான் இராஜேந்திரன்! என்று உரக்கக் கூறி வாழ்த்தினார்.


 வே.கல்யாண்குமார்.