tamilnadu epaper

திருமலை கோவிலில் ஜூலை மாத சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு

திருமலை கோவிலில் ஜூலை மாத  சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு


சென்னை, மார்ச். 17 – -

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. ஜூலை மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை எலக்ட்ரானிக் குலுக்கக்கான முன்பதிவு வரும், 19ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி, 21ம் தேதி காலை, 10:00 மணியுடன் முடிவடைகிறது. 

ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் போன்றவற்றுக்கு, 22ம் தேதி காலை, 10:00 மணிக்கும், ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, அதே நாளன்று மாலை, 3:00 மணிக்கும் துவங்குகிறது. அங்கப்பிரதக்‌ஷனம் செய்வதற்கான முன்பதிவு, 23ம் தேதி காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, அன்று மாலை, 3:00 மணிக்கும் துவங்குகிறது.  

சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, 24ம் தேதி காலை 10:00 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதியில் தங்கு விடுதிகளுக்கான முன்பதிவு, அன்று மாலை, 3:00 மணிக்கும் துவங்குகிறது. ஸ்ரீவாணி டிரஸ்ட், 10,000 ரூபாய் நன்கொடையாளர் சேவைக்கான ஜூலை மாத தரிசன மற்றும் தங்கும் விடுதி முன்பதிவு, 23ம் தேதி காலை, 11:30 மணிக்கு துவங்குகிறது.