tamilnadu epaper

நாள்தோறும்

நாள்தோறும்

மலரென மலரும் மனம்
மதுவென இனிக்கும் குணம்

மழையெனப் பொழியும் சுகம்
கலையென செழிக்கும் தினம்

கனவுகள் விளையும் நிலம்
கற்பனை விரியும் களம்

அன்பில் வளரும் அறம்
இன்பம் பரவும் அகம்

வாய்க்கும் வாழ்க்கை வரம்
சுதி-லயம் சேரும் சுரம்

வந்ததும் தந்ததும் நலமே
வருவதும் தருவதும் வளமே 

எண்ணம் உயர்த்தி
இதயம் மலர்த்துவோமே 
•••••••••••••••••••••••
கவிஞர் ம.திருவள்ளுவர்
திருச்சி