tamilnadu epaper

நீ நிலவு ..

நீ  நிலவு ..


உன்னையே

ஒரு

நிலவாக்கும்

இரவு❤️


இரவு ..

ஆன்மாவின்

செதில்களைச்

செதுக்கும்

நிலவின்

ஒளியுமிழும்

விழுமியங்களை

தூண்டியியக்கும்

நடுநிசியின்

சுவடுகள்❤️


நிழல்களை

நிலைநிறுத்தி

நிஜங்களின்

புஜங்களின்

யுக்திகளை

அரிதாரமென

பூசி

பூக்கத்தெரிந்த

புத்தம்புது

ரத்தந்தோய்த்த

யுத்தமலர்

நீ❤️


பிரளயமென

இரவின்

ரகசிய

வெளிச்சக்கீற்று ..

சாளர சாகச

நிலவின்

கண்களைப் 

பொத்தி

கடந்து

செல்லும்

மஞ்சுமூட்டம்❤️


ஒவ்வொரு 

இடத்திலும்

ஒவ்வொரு

முகம்

காட்டும்

மேகவயல்வெளி

மோகத்தீயைப்

பற்றவைக்கும்

குவலய

சாஸ்த்திர

சம்பிரதாய

இஷ்டத்தின்

பரிகாரம்❤️


சரிசரி

எழும்பிப்பிரகாசி

அந்நிலவுக்குஇனி

ஒளி

தரவல்லவள்

தீயே..

நீமட்டுந்தானே❤️


-ஜவஹர் பிரேம்குமார் ❤️

பெரியகுளம்