tamilnadu epaper

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

நித்தமும் மலர்கிறாய் 
காதலைச் சொல்கிறாய் 

பித்தமும் போனது 
சித்தமும் தெளிவானது 

அன்னத்தின் வடிவே
கன்னத்தில் அழகே 

காந்தவர்ப் பார்வையால்
ஈர்த்திட்டக் காரிகையே 

இதயத்தில் தூரிகையால் வரைந்திட்டேன் ஓவியமே 

செந்தமிழ்ச் சொல்லெடுத்து படைத்திட்டேன் காவியமே 

கார்குழல் தேவதையே
காமனம்பு எய்தவளே 

மையலானேன் உன்னிடம்
மாற்றமது என்னிடம் 

விழிகளின் வீச்சிலே
சரணடைந்தேன் உன்னையே 

நீயில்லாத நேரமெல்லாம் 
நெருப்பாற்றில் தகிக்கிறேனே 

பனித்துளியாய் வந்துவிடு
உள்ளத்திலே உறைந்திடு 

காலமெல்லாம் நீதானே 
என் பொன்வசந்தம்

பெ.வெங்கட லட்சுமி காந்தன்.