tamilnadu epaper

பங்குனி பௌர்ணமி உற்சவம் மற்றும் துலாபாரம் நிகழ்ச்சி

பங்குனி பௌர்ணமி உற்சவம் மற்றும் துலாபாரம் நிகழ்ச்சி


வந்தவாசி, ஏப் 13:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில் பங்குனி மாத பௌர்ணமி உற்சவம் மற்றும் துலாபாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு மலர் மாலைகள் சாற்றப்பட்டு, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து மகா தீபாராதனை நடந்தேறியது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதை முன்னிட்டு கோவில் வாளகத்தில் வைக்கப்பட்டுள் துலாபாரத்தில் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.