tamilnadu epaper

புதுக்கோட்டை அரசு மாதிரி பள்ளி அசத்தல்!

புதுக்கோட்டை அரசு மாதிரி பள்ளி அசத்தல்!


*பொதுத் தேர்வுகளில் ஆல் பாஸ்

புதுக்கோட்டை, மே 28

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில் பொதுத்தேர்வுகள் எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றனர். மேலும் நுழைவுத் தேர்வுகள் மூலம் உயர் கல்வி பயிலவும் தேர்வாகி உள்ளனர்.

உயர்தர வசதிகளுடன் மாவட்டந்தோறும் அரசு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விடுதி வசதியுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் பாடத்துக்கு தலா 2 அல்லது 3 ஆசிரியர்கள் வீதம் கற்பிக்கின்றனர். 

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு கல்வி நிலையங்களில் உயர்கல்வியில் சேர்க்கப்படுகின்றனர். மாதிரிப் பள்ளிகள் இப்பள்ளியில் படிப்போருக்கு, உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் உத்தரவாதம் எனும் இலக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுக்கோட்டை கைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நிகழாண்டு முதல்முறையாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், அதிக மதிப்பெண்களையும் பெற்றனர். இதேபோல, 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய 3 பொதுத் தேர்வுகளிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.