tamilnadu epaper

புத்தாண்டையொட்டி கரிய மாணிக்க வரதர் சிறப்பு பூஜைகள்..!

புத்தாண்டையொட்டி கரிய மாணிக்க வரதர் சிறப்பு பூஜைகள்..!


வந்தவாசி, ஏப் 15:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கரிய மாணிக்க வரதர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு மலர் மாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அர்ச்சகர் ஆனந்த் ஸ்வாமிகளால் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.