tamilnadu epaper

புரியாத புதிர்

புரியாத புதிர்

தியாகத்தின்
     அடிப்படை 
     புரிவதில்லை
     அர்த்தமும்
     தெரிவதில்லை ....."

      சுட்டெரிக்கும்
       சுயநலம்
       தடை போடுகிறது
       செயற்கைக் கோள்
       வேகத்தை விட
       அதிகமாக ....."

        தீவிரவாதம்
        தீவிரவாதி
        தெரியவில்லை
        மதியை சலவை
        செய்து அழிவின்
        ஆக்கத்திற்கு
         வழி தேடுகிறது .... "

        மூட நம்பிக்கை
         பகுத்தறிவு
        தாண்டவம் 
        ஆடும் காலம்
        ஆனாலும் போர்
         முடிவதாக தெரியவில்லை ..."

         பிறப்பில் ரகசியம்
         எதுவும் கற்பிக்க
         படவில்லை நாடும்
         நகரமும் எழுதப்
         படவில்லை .... "

         மனிதன் என்கிற
          ஒரே இனம்
          ஆண் பெண்
           என்கிற ஈர்ப்பு
           கொண்ட குணம்......"

           இன்னும் ஆற்றவு
           பெற்ற மனிதனாய்
           வாழும் காலம்
           கானில் நீரோ
           இல்லை இதுவும்
           இறைவனின்
           கட்டளையா .... "

            அவன்றி ஓர்
             அணுவும்
             அசையாது ....."

    - சீர்காழி. ஆர். சீதாராமன் .