tamilnadu epaper

போரில்லா உலகம்

போரில்லா உலகம்


பஹல்காம் பாதிப்பு 

இன்னும் நெஞ்சில் 

நீர்த்துப் போகவில்லை...

இதன் நிமித்தம் 

இரு நாடுகள் நடத்திய 

நாலைந்து நாள் 

போர் தாக்குதலின் 

பரபரப்பும் பதைபதைப்பும் 

இன்னும் முழுவதுமாய் 

கரைந்து முடியவில்லை...

பண்பாட்டு சிதைவின் 

மொத்த அடையாளம் தானே பயங்கர வாதம்.

மனித அநாகரீகத்தின் 

உச்சபட்ச எல்லையில் 

விலங்கு மூர்க்கத்தில்

மோதிக் கொள்ளும் 

யாரும் விரும்பாத

விபரீத விளையாட்டு தானே முரட்டு 

போர் தாக்குதல்...

தனிமனித ஒழுக்கம் 

சமூகத்தில் 

தடம் புரண்டு போனதால் 

மனித நேயம் புவியில் 

சுத்தமாய்

துடைத்தெறியப் பட்டது 

என்ற வாசகத்தின் 

இன்னொரு பெயர் தானே முரட்டு 

போர் தாக்குதல்...

அகங்காரத்தை

அடியோடு அழிக்கச் 

சொல்லும்

அஹிம்சை நெறியின் 

ஆதார பலத்தை 

அகிலத்தின் 

அதிகார வர்க்கங்கள்

அறிந்தும் அறியாமல் 

அலட்சியப் படுத்துவது ஏனோ?

போரில்லாத 

உலக அமைதியை

ஆயுதங்களை யெல்லாம் 

அழித்து ஒழித்து 

விடுவதால் மட்டும் 

ஒழித்து விட முடியாது.

நீண்ட நெடுங்காலமாக 

ஓய்வே இல்லாமல் 

உறங்கிக் கொண்டிருக்கும் 

உலகத் தலைவர்களின்

உள் மனசாட்சியை

ஓங்கி ஒலிக்கும் 

உரத்த குரலில் 

தட்டி எழுப்பி 

தடம் மாற்றுவதன் மூலம் தான் 

பூரண உலக அமைதியை

நிரந்தரமாய்

பூவுலகில் பூத்திடச் 

செய்ய முடியும்!



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்