தென்பாண்டி மதுரையிலே.. கண்கண்ட காவல் சாமி!
வாரான்டி மதுரை வீரன் வெள்ளைக் குதிரை ஏறி!
மண்கண்ட மதுரைக்காரன்.. மாசான எல்லையோரம் வெள்ளையம்மாள் பொம்மியோடே.. வருகின்றானடி வெட்டுவாள் ஏந்தி.!
சாதிவெறி சமுதாயத்தில்.. சாமான்ய குலமுதித்து சமதருமக் குதிரையேறி
சாராயக்குடம் அருந்தி வாராண்டி மதுரை வீரன்!
ஊருக்குக் காவல்க்காரன்.. கிராமத்து எல்லைக்காப்போன் நேருக்கு நேராய்த் தோன்றி வாரான்டி.. மதுரை வீரன்!
வேண்டுவோர் வேண்டும் வரத்தை.. விரைவாக தந்திட வேண்டி.. யாண்டும் ஓர் ஏழைக்குடிகள்.. நடுவிலே சாட்சியாக.. வாராண்டி மதுரை வீரன்!
-வே.கல்யாண்குமார்.