நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட
103 ரயில்வே நிலையங்களை
மோடி காணொளி மூலம் திறந்து
வைத்தார். கல்வி நிதி 2150 கோடி
மத்திய அரசு வழங்க தமிழக அரசு
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளது. எதையுமே
மத்திய அரசிடம் இருந்து
போராடித் தான்பெற வேண்டி உள்ளது
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான்
தூதரக அதிகாரியை வெளியேற்ற
உத்தரவு. அமலாக்கத்துறை
அக்கப்போர்களுக்கு உச்ச நீதிமன்றம்
மூலம் முடிவு கட்டப்பட்டுள்ளது
என ஆர் எஸ் பாரதி அறிக்கை.
வேலூர் முத்து ஆனந்த் அவர்களின்
காதல் கவிதை தேனில் ஊறிய
பலாப்பழ சுவையை சாப்பிட்டது
போன்று சுவையாக இருந்தது.
லலிதா சகஸ்ரநாமம் படித்தால்
அனைத்து பாவங்களும் நீங்கும்
என்ற கட்டுரை அருமையாக இருந்தது
நேஷனல் ஹெரால்டு வழக்கில்
சோனியா ராகுல் 142 கோடி
ஆதாயம் அடைந்ததாக அமலாக்க
துறை குற்றச்சாட்டு. வக்பு
அடிப்படை உரிமை இல்லை
என உச்சநீதிமன்றத்தில்
மத்திய அரசு வாதம். பாகிஸ்தான்
சீனாவுடன் வர்த்தக உறவை
ஏற்படுத்தி உள்ளது. காசாவில்
14000 குழந்தைகள் உயிருக்கு
ஆபத்து உள்ளது. என ஐநா அறிக்கை
சார் தெய்வம் இதழ் எப்போது வரும்
திருமணநாள் பிறந்தநாள்
வாழ்த்து புகைப்படங்கள்
தனித்துவமாக உள்ளது
பாராட்டத்தக்கது. இன்றைய இதழில்
அனைத்து கவிதைகளும்
அருமையாக இருந்தது
ஹரி கோபி அவர்களின் ஜோக்ஸ்
கன ஜோராக இருந்தது
புது புது கட்டுரைகள் வெளியிடுவதில்
உங்களை மிஞ்ச ஆள் இல்லை
அனைத்தும் அற்புதமாக உள்ளது
தமிழ்நாடு இ பேப்பர் குழுமத்திற்கு
பாராட்டுக்கள்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி