தேமுதிகவுடன் கமுகமான உறவு இருக்கிறது. குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ராஜ்யசபை உறுப்பினர் விஷயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இருப்பதோ இரண்டு இடம்.
அதை கேட்பவர்களோ பத்து பதினைந்து பேர். இரண்டு சீட்டுகளில் இருந்து ஒரு சீட்டை தேமுதிகவுக்கு கொடுப்பது என்பது புத்திசாலித்தனமான காரியமாகாது, அப்படி நடந்தால் அதிமுகவினர் இடையே விரிசல் உண்டாகும். இதை தேமுதிக தலைமை உணர வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கான
மின் கட்டண உயர்வு பெரும் தலைவலியாக இருக்கிறது.
ஆண்டு தோறும் புதிப புதிய
ஏதோ ஒரு பெயர்களில் மின் கட்டணத்தை உயர்த்தி கொண்டே போவதால் சிறு குறு தொழிற்சாலைகள்
நலிவடைந்து வருகின்றன.
ஒரு புறம் அன்னிய முதலீடுகளை ஏற்போம் என்று கூறி புது புது தொழிற்சாலைகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் அரசு இங்கு ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறிய தொழிற்சாலைகளை சிரமத்தில் ஆழ்த்தலாமா ?
கரோனா பாதித்த இளைஞர் ஒருவர் தமிழக மருத்துவமனையில் இறந்து இருக்கிறார். இணை நோய்களின் காரணமாக இவர் இறந்ததாக மருத்துவர்கள் கூறுவதால் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டு இருக்கிறது. மறுபுறம் கிட்டத்தட்ட இணை நோய்கள் இல்லாதவர்களே இப்போது இல்லை என்ற நிலை இருப்பதால் அனைவருக்கும் பயமும் ஏற்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஐந்து மாதங்களில் 700 குழந்தை திருமணங்கள் நடைபெற்று இருப்பதான செய்தி கவலை அளிக்கிறது. குழந்தை திருமணங்களுக்கு புகழ் பெற்ற முஸ்லிம் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானிலேயே குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது,
ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு மாநிலம் இருப்பதை
எப்படி ஏற்க முடியும் ?
இலவசமாக நமது பத்திரிகையில் வெளியிடப்பட்டு வரும் பிறந்தநாள் வாழ்த்து புகைப்படங்கள் இன்று ஒரு முழு பக்கத்தையும் ஆக்கிரமித்து இருக்கின்றன.
இது பத்திரிகையின் பெருந்தன்மையை காட்டுகிறது.
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்