அக்டோபரில் இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

அக்டோபரில் இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி:

செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 27 வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு (ஃபிடே) அறி​வித்​துள்​ளது. போட்டி நடை​பெறும் நகரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இந்​தத் தொடரில் 206 வீரர்​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோது​வார்​கள். முதல் 3 இடங்​களை பிடிப்​பவர்​கள் 2026-ம்

ஆண்டு நடை​பெறும் ஃபிடே கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறு​வார்​கள். கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் வீரரே, உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பில் விளை​யாட தகுதி பெறு​வார். கேண்​டிடேட்ஸ் தொடரின் வெற்​றி​யாளர், தற்​போது உலக சாம்​பிய​னாக உள்ள இந்​தி​யா​வின் டி.கு​கேஷுடன் பலப்​பரீட்சை நடத்​து​வார்.


செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்​களுக்கு பிறகு இந்​தியா நடத்த உள்​ளது. கடைசி​யாக 2002-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்​தி​யா​வின் விஸ்​வ​நாதன் ஆனந்த் வெற்றி பெற்​றிருந்​தார். இந்​தத் தொடரில் வீரர்​கள் நாக் அவுட் முறை​யில் போட்​டி​யிடு​வார்​கள். இதனால் ஒவ்​வொரு சுற்​றி​லும் தோல்​வியடை​யும் வீரர் வெளி​யேற்​றப்​படு​வார்.


ஃபிடே வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “உல​கக் கோப்பை தொடரில் 2021 முதல், நாக் அவுட் முறை பின்​பற்​றப்​படு​கிறது. ஒவ்​வொரு சுற்​றும் மூன்று நாட்​கள் நீடிக்​கும். முதல் இரண்டு நாட்​களில் இரண்டு கிளாசிக்​கல் ஆட்​டங்​கள் நடை​பெறும். அதைத் தொடர்ந்து தேவைப்​பட்​டால் மூன்​றாவது நாளில் டை-பிரேக்​கர் நடை​பெறும். 2025-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் மூன்று இடங்​களைப் பிடிக்​கும் வீரர்​கள், உலக செஸ் சாம்​பியன்​ஷிப்​பிற்​கான போட்​டி​யாளரைத் தீர்​மானிக்​கும் 2026-ம் ஆண்டு நடை​பெறும் கேண்​டிடேட்ஸ் போட்​டிக்கு நேரடி​யாக தகுதி பெறு​வார்​கள்” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%