அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி


வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறு​வனத்​திடம் இருந்து 500 மில்​லியன் டாலர் கடன் பெற்று இந்​திய வம்​சாவளி சிஇஓ மோசடி செய்​துள்​ளார்.


அமெரிக்​கா​வில் உள்ள நிதி நிறு​வனம் பிளாக் ராக். இந்​நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான எச்​பிஎஸ் நிறு​வனத்​திடம், பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்​ஜ்​வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறு​வனங்​களை நடத்தி வரும் இந்​திய வம்​சாவளி சிஇஓ பாங்​கிம் பிரம்​பட் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்​றுள்​ளார்.


கடனாக பெற்ற பணத்தை எல்​லாம் இவர் இந்​தியா மற்​றும் மொரிசீயஸ் நாட்​டுக்கு மாற்​றி​யுள்​ளார். சில இ-மெ​யில் முகவரி​களில் மாற்​றங்​கள் இருந்​ததை கண்​டு​பிடித்த எச்​பிஎஸ் நிறுவன ஊழியர் ஒரு​வர், பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்ஜ் வாய்ஸ் நிறு​வனம் முறை​கேடு​கள் செய்​வதை கண்​டறிந்​தார். இது குறித்து எச்​பிஎஸ் நிறுவன அதி​காரி​கள் பிரம்​பட்​டிடம் கேட்​ட​போது, அது பற்றி கவலைப்பட வேண்​டாம், கடனை அடைத்து விடு​வோம் என கூறி​யுள்​ளார். அதன்​பின் அவர் எந்த கேள்வி​களுக்​கும் பதில் அளிக்​க​வில்​லை.


இதையடுத்து எச்​பிஎஸ் நிறுவன அதி​காரி​கள் கடந்த ஜூலை மாதம் பிரம்​பட் நிறு​வனங்​களுக்கு சென்​ற​போது அவை மூடப்​பட்டு இருந்​தன. கடந்த 2 ஆண்​டு​களாக பிரம்​பட் நிறு​வனங்​கள் அளித்த வாடிக்​கை​யாளரின் இ-மெ​யில்​கள், வாடிக்​கை​யாளர்​கள் பிரம்​பட் நிறு​வனத்​துடன் செய்த ஒப்​பந்​தங்​கள் எல்​லாம் போலி​யானவை என கண்​டறியப்​பட்​டது.


கடன் அடமான​மாக காட்​டிய சொத்​துக்​கள் எல்​லாம் விற்​கப்​பட்டு இந்​தியா மற்​றும் மொரிசீயஸில் உள்ள வங்கி கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்டு விட்​டன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரம்​பட்​டின் தொலைத் தொடர்பு நிறு​வனங்​கள் திவால் ஆனதாக அறிவிக்​கப்​பட்​டன. 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த பாங்​கிம் பிரம்​பட் தற்​போது இந்​தி​யா​வில்​ இருப்​ப​தாக நம்​பப்​படுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%