ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சாகசம்

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சாகசம்

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் அலைசறுக்கு போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாமல்​லபுரம்: மாமல்​லபுரத்​தில் நடை​பெற்று வரும் ஆசிய சர்ஃபிங் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சிறு​வர்​களுக்​கான பிரி​வில் பலர் பங்​கேற்று அலைசறுக்கு விளை​யாட்​டில் ஈடு​பட்டு சாகசம் செய்​தனர். ஆசிய சர்ஃபிங் சாம்​பியன்​ஷிப் 2025 போட்டி மாமல்​லபுரம் கடற்​கரை​யில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.


இதில், தாய்​லாந்​து, பங்​களாதேஷ், சீனா, இந்​தோ​னேசி​யா, இந்​தி​யா, பிலிப்​பைன்​ஸ், மியான்​மர், கொரி​யா, மலேசி​யா, சிங்​கப்​பூர், திபெத், இலங்​கை, குவைத், உஸ்​பெக்​கிஸ்​தான் உள்​ளிட்ட 19 ஆசிய நாடு​களைச் சேர்ந்த 102 விளை​யாட்டு வீரர்​கள் பங்கேற்றுள்ளனர்.


இந்​திய சர்ஃபிங் கூட்​டமைப்​பு, ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்​பு, தமிழக விளை​யாட்டு துறை அமைச்​சகம் இணைந்து ஏற்​பாடு செய்துள்ள இந்த போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்​கியது. ஆக.12-ம் தேதி வரை மாமல்​லபுரம் கடற்​கரை​யில் தின​மும் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடை​பெற உள்​ளது.


இந்​நிலை​யில், 18 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர்​களுக்​கான போட்டி நேற்று நடை​பெற்​றது. இதில், சிங்​கப்​பூர், தாய்​லாந்​து, இந்​தியா உட்பட பல்​வேறு வெளி​நாடு​களை சேர்ந்த சிறு​வர்​கள் பங்​கேற்று அலைசறுக்கு போட்​டியில் ஈடுபட்டனர்.மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் அலைசறுக்கு போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%