பூஞ்சை தொற்றென நெஞ்சை மூடும்,
ஆற்றாமையை வெல்லுதல் எளிதல்ல எந்நாளும்!
முகம் பார்க்கும் கண்ணாடி மேல்
படிந்திருக்கும் தூசி அல்ல; ஆற்றாமை.
இடக்கையால் துடைத்து
மீட்டும் முகம் பார்க்க.
புதைக்கப்பட்ட விதை முளைப்பது அன்ன
பதிவாய் கிளைத்து வரும் ஆற்றாமை
ஆற்றாமை விடாது உன்னை; என்றும்
நீ அதை விட்டு விலக;
அருமருந்து ஒன்றே உண்டு; ஆற்றாமைக்கு
போராட்டத்திற்குப் பின் பெற்ற வெற்றிகள்
தந்த உச்சிகளை நினைத்து மகிழ்
ஏற்பிசைவு நீ தந்தால் மட்டுமே
தோல்வியாய் தோன்றும்; அதை புறந்தள்ளி
மேலே பயணம் செய்ய ஆற்றாமை
தோற்றுப் போகும்
வெற்றி வந்து
தங்கும் உன் கையில்
சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%