news Breaking News
clock

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்த்தி கணிப்பு: ஆர்பிஐ

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்த்தி கணிப்பு: ஆர்பிஐ


 

2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(ஜிடிபி) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதிச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், உள்நாட்டுத் தேவையின் நீடித்த தன்மை மீது நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக, வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் (ரெப்போ ரேட்) மாற்றங்களை அறிவிக்காத நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(ஜிடிபி) கணிப்பை 7.3 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.


திருத்தப்பட்ட இந்தக் கணிப்பு, டிசம்பரில் அறிவிக்கப்பட்ட 7.3 சதவீத வளர்ச்சி மதிப்பீட்டிலிருந்து ஒரு மிதமான உயர்வாகும். இது, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் உலகளாவிய சவால்களிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வலுவாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


2026-27 ஆம் ஆண்டுக்கான தனது முந்தைய கணிப்புகளை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. முந்தைய மதிப்பீடுகளான 6.7 சதவீதம் மற்றும் 6.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் 6.9 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 7 சதவீதமாகவும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என்று ஆண்டறிக்கையில் கணித்திருந்தது.


சா்வதேச அளவில் புவி அரசியல் பதற்றங்கள் அதிகரித்தாலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. வளா்ச்சியும் மேம்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனும் வா்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நுகர்வு மற்றும் முதலீட்டில் நீடித்த உத்வேகத்தின் ஆதரவுடன், பொருளாதார செயல்பாடு அடுத்த நிதியாண்டிலும் சிறப்பாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News