இந்திய - ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று மிக்-21 போர் விமானம்: ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
Sep 28 2025
37

சண்டிகர்:
இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 வெறும் ஒரு விமானம் அல்ல; அது இந்தியா - ரஷ்யா இடையேயான ஆழமான உறவின் சான்று என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் மற்றும் இடைமறிப்பு விமானங்களாக செயல்பட்டன. 1960களின் முற்பகுதியில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானங்கள், 1965, 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்களில் முக்கிய பங்காற்றின. மேலும், 1999 கார்கில் போர், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றிலும் மிக்-21 போர் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.
இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்து வந்த மிக்-21 போர் விமானங்களுக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வு சண்டிகரில் இன்று நடைபெற்றது. ராணுவப் பயன்பாட்டில் இருந்து அவற்றை நீக்கும் இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி உள்பட ஏராளான ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், “மிக்-21 விமானம் தனது செயல்பாட்டில் இருந்து விடைபெறுகிறது. மிக்-21, வெறும் போர் விமானங்கள் மட்டுமல்ல. அவை, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் ஆழமான உறவின் சான்று. இந்திய விமானப்படை வரலாற்றிலும், ராணுவ விமான போக்குவரத்து வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் குறிப்பிடப்படும் ஒரு அத்தியாயம் மிக்-21.
சர்வதேச அளவில் ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் வேறு எந்த போர் விமானமும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டதில்லை. உலக அளவில் 11,500-க்கும் மேற்பட்ட மிக்-21 போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் சுமார் 850, இந்திய விமானப்படையில் பணியாற்றின. இந்த எண்ணிக்கையே, இந்த போர் விமானத்தின் புகழ், நம்பகத்தன்மை மற்றும் பல பரிமாண திறன்களுக்கு சான்றாகும்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?