இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா; நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா; நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது



19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் மோதியது. மழையால் 20 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 138 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக சமிகா ஹீனாதிஹலா 42 ரன்கள் எடுத்தார்.


அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஆயுஷ் மாத்ரே (7 ரன்), வைபவ் சூர்யவன்ஷி (9 ரன்) 4-வது ஓவருக்குள் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஆரோன் ஜார்ஜ் (58 ரன், 49 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), துணை கேப்டன் விஹான் மல்கோத்ரா (61 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்து அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தனர். இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணியை பாகிஸ்தான் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக்கில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்தது நினைவு கூரத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%