உள்ளத்தில் உண்மை ஒளி

உள்ளத்தில் உண்மை ஒளி


நேரிசை வெண்பா!


மனத்தில்

  தெளிவுடன்

     மாண்பாம்

       அறிவும்

கனிவாய்

  இருந்திட்டால்

     காணும்...

       கனியான

பேச்சில்

  உருவாகும்

    பீடுற்ற

      நற்சொல்லே

மூச்சுதான்

   உள்ளவரை

      முன்!



உள்ளக்

  கருத்தையே

     உன்னத

       மாகவே

கள்ளங்

   கபடமின்றிக்

     கண்டாலே...

        துள்ளும்

மனமுமே

  தூய்மையான

    மாண்புடைச்

      சொல்லும்

வனப்பாகும்

   அன்றோ

     வளம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%