" மாமி ! ஆச்சாரிக்கிட்ட ஒரு வேலை யாப் போயிருந்தேன். வெள்ளிக் கம்பியில கோக்கச் சொல்லி ஸ்படிக மாலை செய்யச் சொல்லியி ருந்தே ளாமே ! உங்கக் கொடுக்கச் சொல் லிக்கொடுத்தார் ஆச்சாரி .. இந்தா ங்க !" எதிர் வீட்டு கோபு நீட்டிய மாலையை முறுவலிப்புடன் பெற்
றுக்கொண்டார் பங்கஜ மாமி
" ரொம்ப தேங்ஸ்டா கோபு ! தனியா ளாய் நான் லோல் பட்டிக்கிட்டுருக்கற சமயமெல்லாம் நீயாவது வந்து ஒத்தாசை செய்றியே அது நான் செஞ்ச புண்ணியம் !"
" பரவாயில்ல மாமி ! அந்தப் பக்கம் போக வேண்டிய வேலை இருந்தது. அதனால உங்க மாலைய வாங்க முடிஞ்சுது..." என்றவன் தொடர்ந்தான்.
" அப்புறம்...மெயின் ரோடுல இருக்கே
காமதேனு முதியோர் இல்லம்...."
" ஆமா..வயசான ஸ்திரிகளுக்காக நடத்தப்படுகிறது ! ஹூம்! பாவம், எத்தனையோ பேர் உதாசீனம் செய் யப்பட்டு அங்க லோல் படறாங்க !" நெஞ்சு நிறைய ஆதங்கத்துடன் கூறினார் பங்கஜ மாமி. முகத்தில்
வயோதிகத்துடன் கூடிய வேதனை யின் ரேகைகள் நிறையவே காணப் பட்டாலும், ஒரு விதத்தில் அவர்களின் நிலைமையை எண்ணி ஆசுவாசமும் ஏற்பட்டது.
கோபு தொடர்ந்தான்.
" அங்க ஒரே கூட்டம் மாமி ! என்ன ன்னு விசாரிச்சுப் பார்த்தேன். இன் னிக்கு அன்னையர் தினமாம் ! அதனால அங்க சேர்ந்திருக்கிற தங்கள் அம்மாவுக்காக கையில பழங்களோட அவா மகன்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து விசிட் பண்ணியிருக்கா !
" என்னவொரு அவலம்பார்த்தீங்களா
மாமி ! அம்மாவை தங்களோடவச்சுக்க
மாட்டா...முதியோர் இல்லத்தில சேர் த்திட்டு என்னிக்காவது ஒருநாள் போய் பார்க்கறது...வயசான கால த்தில பெத்த மகனோட அரவணை ப்புக்காக ஒவ்வொரு தாயின் மனசு எப்படி ஏங்கித் துடிக்கும் ! இது ஏன் மகன்கள் உணரமாட்டேங்குறா ?" அங்கலாய்த்தான் கோபு.
" கோபு ! ஒருவிதத்தில அந்தத் தாய் மார்கள்அதிர்ஷ்டக்காரங்கதான்...உள்ளூர்லயே மகன்க இருக்கா. எப்ப வாவது போய் பார்க்கறா. பேசறா. அது அங்க இருக்கறவாளுக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது. ஆனா நான்...." பங்கஜத்தின் குரல் பிசு ரியது. சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். " என் ஒரே பையன் நன்னாப் படிச்சான்.அமெரிக்காவுல வேலை. சரின்னு ஒத்துக்கிட்டேன். ஆனால் , தன்னோட வேலை பார்க் குற பெண்ணையே கல்யாணம் செய்துகிட்டான். வருஷம் மூணு
ஆகறது. இன்னும் என்னை வந்த பார்க்கல்ல. எப்பவாவது ஃபோன்ல வீடியோ கால்ல பேசுவான். அவ்வள வுதான். நான் பிக்கல் பிடுங்கல் இல் லாம சுதந்திரமாதான் இருக்கேன். ஆஸ்தி அந்தஸ்துக்கு குறைவுமி ல்லே. என்ன பிரயேஜனம் ?. பெத்த மகனோடு மருமளோடவும் நேரடியாக பேசும் கொடுப்பினை எனக்கில் லாமல் போயிடி ச்சே ! " மூக்குறிஞ் சியபடி தொடர்ந்தார் . " ஆனால் முதியோர் இல்லத்தில் இருக்கறவா நாலு சுவற்றுக்குள்ளே இருந்தாலும் அடிக்கடி தங்கள் மகன்களோட நேருக்கு நேர் பேசுற கொடுப்பினை இருக்கு. அவாளோட அருகாமை கிடைக்கிறது. அதனால ஆத்ம திருப்தி .கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அவா கொடுத்து வச்ச
வாதான் கோபு !"
மாமியின் ஏக்கம் கோபுவிற்குப் புரிந்தது. அந்த விஷயத்தை சொல்லி யிருக்கக் கூடாது என வேதனையுடன்
நினைத்துக் கொண்டான் கோபு.

--வி.கே.லக்ஷ்மிநாராயணன்