தமிழக அரசு அறிவிப்பு சென்னை, டிச. 29 - தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் இதுநாள் வரையிலும் நேரடியாக நடைபெற்றுவந்த சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வுகள் வரும் ஆண்டிலிருந்து கணினி வழியாகவும் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக இயக்ககத்தின் சார்பில் ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு: 2026 பிப்ரவரியில் நடைபெறவுள்ள சிஓஏ (COA - Computer on Office Automation), ஆங்கிலம் - தமிழ் சுருக்கெழுத்து, ஆங்கிலம் - தமிழ் தட்டச்சு ஆகிய தேர்வுகள் கணினி அடிப்படையிலான தேர்வுகளாகவும் (CBE-Computer based examinations), இதுநாள் வரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நேரடித் தேர்வுகளாகவும் (TME-Traditional Method of Examinations) நடத்தப்படும். சுருக்கெழுத்து நேரடித் தேர்வுகள் பிப்ரவரி 7, 8 தேதிகளில் நடைபெறுகின்றன. தட்டச்சுத் தேர்வுகள் பிப்ரவரி 14, 15 தேதி களில் நடைபெறுகின்றன. சுருக்கெழுத்துத் தட்டச்சுப் பயில கங்களில் கணினி வழியே தேர்வுகள் பிப்ரவரி 23 தேதியிலிருந்து ஏப்ரல் 20-ஆம் தேதி வரை யிலும் கட்டம் கட்டமாக நடைபெறுகிறது. பயிலகங்களில் கணினி வழி தேர்வு நடை பெறுவதற்கு சாத்தியமில்லாத பயிலகங்கள் மாவட்டங்களில் தொழில்நுட்ப இயக்ககத் தால் அறிவிக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக்கு களில் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வு கள் ஏப்ரல் 21-க்குப் பின்னர் நடைபெற உள்ளன. அனைத்து வகைகளிலும் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் 30 அன்றும், பாலிடெக்னிக்குகளில் நடைபெற்ற தேர்வு களின் முடிவுகள் மே 20 அன்றும் வெளியிடப் படும். 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் இவ்விரு வகைகளிலும், பின்னர் 2028-இலிருந்து கணினி வழியில் மட்டுமே தேர்வுகள் நடைபெ றும் என்று தெரிகிறது. கணக்கியல் தேர்வுகள் (accountancy) மட்டும் வழக்கம்போல் நேரடியாகவே நடைபெறும். (ந.நி.)
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?