கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

புதுடெல்லி:

இந்​தியா - சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா - சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன.


அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்து கை கலப்​பில் ஈடு​பட்​டனர். இதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் மீண்​டும் சச்​சரவு ஏற்​பட்​டது. இதனால் இந்​தியா - சீனா நேரடி விமானப் போக்​கு​வரத்து நடை​பெற​வில்​லை.


இந்​நிலை​யில், சீனா, இந்​தி​யா​வுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதி​கபட்ச வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களும் அமெரிக்கா​வுக்கு பதிலடி கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ளன. சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ நேற்​று​முன்​தினம் பிரதமர் மோடியை டெல்​லி​யில் சந்​தித்து பேசி​னார். இதையடுத்து இந்​தியா - சீனா இடையே விரை​வில் நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.


இதுகுறித்து சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் கூறும்​போது, “சீ​னா வைப் பொறுத்​தவரை​யில் நாளைக்கே விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யும். ஆனால், இந்​திய விமானங்​களை சீனா​வுக்கு இயக்​கு​வதற்கு முன்​ன​தாக சில நடை​முறை​களை பூர்த்தி செய்ய வேண்டி உள்​ளது.


எனவே, இரு நாடு​களும் எப்​போது விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யுமோ, அப்​போது தொடங்​கலாம் என்று முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​காக நீண்ட நாட்​கள் எடுத்​துக் கொள்ள முடி​யாது. ஒரு மாதத்​துக்​குள் விமானங்​களை இயக்க நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்” என்​றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%