கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு

கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு

காளகப்பா நிதகுன்ட்டி. அடுத்தபடம்: சோதனை நடைபெற்ற வீடு. கடைசி படம்: பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள், 40 ஏக்​கர் நிலம் ஆகிய​வற்​றின் ஆவணங்​களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 4 வாக​னங்​களும் சிக்​கின.


கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. அவர் தற்​காலிக ஊழிய​ராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதி​யம் பெற்​று​வந்த நிலை​யில், முன்​னாள் அரசு பொறி​யாளர் சின்​சோல்​கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்​பிலான அடிப்​படை கட்​டமைப்பு திட்​டங்​களை மேற்​கொள்​வ​தாக ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் பணம் வசூலித்​த​தாக​வும் அதில் குற்​றம் சாட்​டப்​பட்​டிருந்​தது.


இதையடுத்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நேற்று கொப்​பலில் உள்ள அவரது வீடு, அலு​வல​கம், அவரது சகோ​தரர் ஜெகன் குன்ட்டி​யின் வீடு ஆகிய​வற்​றில் சோதனை நடத்​தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நட‌ந்த இந்த சோதனை​யில் 30 போலீ​ஸார் ஈடு​பட்​ட‌னர்.


அப்​போது காளகப்பா வீட்​டில் கணக்​கில் வராத 24 வீடு​களின் ஆவணங்​கள், 4 காலி வீட்டு மனை​களின் ஆவணங்​கள், 40.8 ஏக்​கர் விவ​சாய நிலத்​தின் ஆவணம் ஆகியவை சிக்​கின. இந்த சொத்​துகள் காளகப்​பா, அவரது மனைவி மற்​றும் அவரது சகோ​தரரின் பெயரில் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன.




இதைத் தொடர்ந்து அவரது வீட்​டில் இருந்து ரகசிய பீரோ​வில் சோதனை நடத்​தி​ய​தில் ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகளும், 1.5 கிலோ எடை​யுள்ள வெள்​ளிப் பொருட்​களும் சிக்​கின. மேலும் 16 விலை உயர்ந்த கைக் கடி​காரங்​கள், 2 கார்​கள், 2 இரு சக்கர வாக​னங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.


இதுத​விர முன்​னாள் அரசு பொறி​யாளர் சின்​சோல்​கருடன் இணைந்து 96 முழு​மையடை​யாத திட்​டங்​களுக்கு போலி ஆவணங்​களை தயாரித்து ரூ.72 கோடிக்​கும் அதி​க​மாக மோசடி செய்​ததற்​காக ஆதா​ரங்​கள் சிக்​கின. தினக்​கூலி அடிப்​படை​யில் தற்​காலிக பணி​யாள​ராக பணி​யாற்​றிய முன்​னாள் எழுத்​தரின் வீட்​டில் சிக்​கிய பொருட்​களை கண்​டு, அதி​காரி​கள் வியப்​படைந்​தனர்.


இதுகுறித்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘காளகப்பா நிதகுன்ட்டி மீது சட்​டப்​படி வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ரூ.30 கோடி மதிப்​பிலான தங்க நகைகள், வெள்​ளிப் பொருட்​கள், சொத்​துகளின் ஆவணங்​கள் உள்​ளிட்​டவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. அவருக்கு இவ்​வளவு சொத்​து​கள் எப்​படி வந்​தது? அவருடன் தொடர்​புடைய அரசு அதி​காரி​கள், அரசி​யல் தலை​வர்​கள் யார் என்​பது குறித்​து வி​சா​ரித்​து வரு​கிறோம்​’’ என்​று தெரிவித்​தனர்​.




Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%