
எந்தக் கலையையும் மலையென எண்ணி விட்டால்
சிலை போல நின்று தளர்ந்து விடுவாய்..... வலை போட்டு தேடி உனக்குப் பிடித்த கலையை கற்றுக் கொண்டால் கலைஞர்கள் வரிசையில் வந்து விடுவாய்
ஆயக்கலைகள் 64 அதில் எல்லாமே பிடித்த கலைகள் என்றால் உன் திறமைக்கு எது சவால் என்று யோசித்து முடிவு எடுத்து விடு
கருங்கல்லை சிலையாக்குவதும் கலைதான்
காகிதத்தில் ஓவியம் வரைவதும் கலை தான்
கால்கள் அதிர சலங்கைகள் கட்டி பரதம் ஆடுவதும் கலை தான்
கலைஞர்கள் கையில் ஒரு தொழில் இருப்பதால் வாழ்வில் மலைக்கும் நிலையே வராது ...
கலைஞர்கள் கரங்களை நம்புபவர்கள் என்பதால் உற்சாகமான வாழ்க்கையே அமையுமே ..
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%