news Breaking News
clock

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஆக,14-

நாடு முழுவதும் நாளை 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சென்னை அணுமின் நிலையம் பாபா அனு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருசக்கர வாகனம் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே அனுப்பபடுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News