கியூரி மருத்துவமனை சார்பில் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

கியூரி மருத்துவமனை சார்பில் சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

சென்னை:

கியூரி மருத்​து​வ​மனை சார்​பில் ஒரு மாதம் நடத்​தப்​பட்ட சிறுநீரக விழிப்புணர்வு நிகழ்ச்​சி​யில் சிறுநீரக ஆரோக்​கி​யம் குறித்த படைப்​பு​களை பள்ளி மாணவர்​களும், சிகிச்​சைகள் பற்​றிய ‘ரீல்​ஸ்​’களை கல்​லூரி மாணவர்​களும் உரு​வாக்​கினர். இலவச சிறுநீரகப் பரிசோதனை முகாமில் ஏராள​மான மக்​கள் பங்​கேற்று பயன்​பெற்​றனர்.


சென்னை துரைப்​பாக்​கத்​தில் உள்ள கியூரி மருத்​து​வ​ மனை (சென்னை சிறுநீரகம் மற்​றும் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம்) சிறுநீரக மருத்​து​வத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் முழு​வதும் சிறுநீரக ஆரோக்​கி​யம் மற்​றும் ஆரம்ப நிலை​யில் பிரச்​சினையை கண்டறிதல் குறித்த விழிப்​புணர்வு நிகழ்வை நடத்​தி​யது.


பள்​ளி​களுக்கு இடையி​லான ஓவியப் போட்​டி​யில் சிறுநீரக ஆரோக்​கி​யத்தை மைய​மாகக் கொண்ட படைப்​பு​களை மாணவர்​கள் உரு​வாக்​கினர். மாணவர்​களின் பெற்​றோர் மற்றும் ஆசிரியர்​களுக்​காக இலவச சிறுநீரகப் பரிசோதனை மற்​றும் விழிப்​புணர்வு அமர்​வு​கள் நடத்​தப்​பட்​டன.


அதே​போல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்​சை, டயாலிசிஸ் சிகிச்சை உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​ களில் மாணவர்​கள் பயனுள்ள ‘ரீல்​ஸ்​’களை உரு​வாக்​கினர். இறுதி நாளான நேற்று முன்​தினம் மருத்​து​வ​மனை​யில் இலவச சிறுநீரகப் பரிசோதனை முகாம் நடை​பெற்​றது.


ஏராள​மானோர் இம்​மு​காமில் பங்​கேற்று சிறுநீரகப் பரிசோதனை செய்து கொண்​டனர். அப்​போது சிறுநீரகம் சார்ந்த உண்​மை​கள் மற்​றும் தவறான தகவல்​கள் குறித்து சிறுநீரக மருத்​து​வர் குகன் பேசி​னார். அதே​போல், சிறுநீரக நோயாளி​கள், அவர்​களின் பராமரிப்​பாளர்​கள் மற்​றும் மருத்​து​வக் குழு​வினருடன் நடந்த சிந்​தனையூட்​டும் கலந்​துரை​யாடலில் சிறுநீரக மருத்​து​வர் அஜய் ரதோன் உரை​யாற்​றி​னார்.


கியூரி மருத்​து​வ​மனை தனது மருத்​துவ நிபுணத்​து​வத்​துடன், சமூக விழிப்​புணர்வு முயற்​சிகளை​யும் இணைத்​து, சிறுநீரக சிகிச்சை மக்​களுக்​கு எளி​தில்​ கிடைக்​கச்​ செய்​வதற்​கு தொடர்ந்​து செயல்​பட்​டு வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%