கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் பயிற்சி பெற்ற இலுப்பையூரணி விந்தியாவுக்கு டிஎஸ்பி பாராட்டு.
Jul 13 2025
18

கோவில்பட்டி அமைந்துள்ள சங்கரலிங்கபுரம் உள்ள மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் பயிற்சி பெற்ற இலுப்பையூரணி விந்தியா என்ற மாணவி, தேசிய அளவிலான பெண்கள் பங்குபெறும் 18 வயதிற்கு உட்பட்ட போட்டி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார், அவரைப் பாராட்டும் விதமாக கோவில்பட்டி மார்க்கெட்ரோடு தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை கோவில்பட்டி காவல் துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்குமார். வெற்றி பெற்ற வீராங்கனைக்கு நினைவு பரிசு கேடயம் வழங்கினார், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி . மற்றும் பார்வர்ட் பிளாக் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் வெற்றி பெற்ற மாணவிக்கு நினைவு கேடயம் வழங்கினார்கள், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் இந்த வீராங்கனைக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரை பாராட்டி நினைவு கேடயம், மற்றும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் புதிய சீருடைகள் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி திமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெய கண்ணன், சிதம்பரம்பட்டி முன்னாள் கபடி வீரர் பரதன், சங்கரலிங்கபுரம் கபடி பயிற்சியாளர் சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?