சமூகநீதி நாள் உறுதிமொழி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில்

சமூகநீதி நாள் உறுதிமொழி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில்



திராவிட இயக்கத் தலைவர், சமூக சீர்திருத்தவாதி பெரியார் இ.வே.ராமசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணி திட்டம் (NSS) சார்பாக நடத்தப்பட்டது. சமூக நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சு. பலவேச கிருஷ்ணன் செய்திருந்தார். மேலும் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் தணிகை செல்வி, வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் யமுனா முனைவர் சண்முகம் அலுவலகப் பணியாளர் திருமதி தாயம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.


சமூக ஒற்றுமை, சமநீதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி மாணவர்களிடம் சமூக அக்கறையை உருவாக்கியது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%