சர்வதேச பேட்மிண்டன்: இந்தியாவின் திரிசா–-காயத்ரி ஜோடி மீண்டும் சாம்பியன்

சர்வதேச பேட்மிண்டன்: இந்தியாவின் திரிசா–-காயத்ரி ஜோடி மீண்டும் சாம்பியன்


சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது.


பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி –- காயத்ரி கோபிசந்த் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-–21, 21–-13, 21–-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. திரிசா- காயத்ரி ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.


நேற்று நடந்த திரில்லிங்கான ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 16-–21, 21–-8, 20–-22 என்ற செட் கணக்கில் ஜாசன் குனவானிடம் (ஹாங்காங்) போராடி தோற்றார். இதில் கடைசி செட்டில் 20-–20 என்று வரை சமனிலை நீடித்தது. இறுதியில் கடைசி இரு புள்ளிகளை தனதாக்கி குனவான் வெற்றிக்கனியை பறித்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹினா அகேச்சி (ஜப்பான்) 21-–16, 21–-14 என்ற நேர் செட்டில் நேஸ்லிஹான் அரினை (துருக்கி) வீழ்த்தி மகுடம் சூடினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%