சளுக்கை ஸ்ரீ சுகநாராயணப் பெருமாள் பவித்ரோத்சவம்

சளுக்கை ஸ்ரீ சுகநாராயணப் பெருமாள் பவித்ரோத்சவம்



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுகந்தவல்லி‌ நாயிகா சமேத ஸ்ரீ சுகநாராயணப் பெருமாள் கோவிலில் மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பவித்ரோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு‌விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு திருப்பவித்ரம் சமர்ப்பிக்கப்பட்டு, மேள வாத்தியங்களுடன் மாலை மஹாபூர்ணாஹூதியுடன் பெருமாள் உள்புறப்பாடு நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%