சீர்காழியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எஸ்ஐஆர் - 2025 விழிப்புணர்வு முகாம்
Nov 16 2025
11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிளையின் சார்பாக, கிளை நிர்வாகத்தினால் கடந்த 12-ம் தேதி முதல் தினந்தோறும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை சீர்காழி கிளை மர்க்கஸ்ஸில் மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் 2025 படிவத்தினை பூர்த்தி செய்ய தேவையான ஆவணங்கள் குறித்தும், முந்தைய எஸ்ஐஆர் 2002 வரைவு பட்டியலில் இருந்து எவ்வாறு தகவல்களை சேகரிப்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பயனாளர்கள் ஐயமின்றி தங்கள் படிவங்களை பூர்த்தி செய்துக் கொண்டனர். இந்த முகாமில் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?