சுதந்திர தினத்தையொட்டி திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
Aug 07 2025
12

திருப்பூர்:
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி, தேசியக்கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆண்டுதோறும் தேசிய கொடிகளை தயாரித்து வருகிறோம். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தேசிய கொடிகளை இப்போது விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம்.
ஆர்டர்களின் பேரில் பெற்ற கொடிகள் தயாரிப்பு பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. சில பின்னலாடை நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் பலர் வீடுகளிலேயே வைத்து தயாரிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். முன்பெல்லாம் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் தேசிய கொடியை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது பலர் புதிதாகவே வாங்கி ஏற்றுகின்றனர். இதன் மூலம் எங்களுக்கு லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைக்கிறது.
வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.
10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.2 முதல் ரூ.300 வரை கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் பிரிண்டிங் செய்து, அங்கிருந்து கொண்டு வந்து வெட்டி தைக்கிறோம். தற்போது தேசியக்கொடி தைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைவரும் 10-ந்தேதிக்குள் தைத்துத்தர கேட்டிருப்பதால் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன என்றார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?