சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டெக்கர் பேருந்து?
Nov 22 2025
19
தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழக அரசு, பேருந்து சேவையை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகா், புறநகா்ப் பகுதிகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் டபுள் டெக்கா் பேருந்துகள் மீண்டும் வலம் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கான முயற்சிகள் கடந்த 2023 முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயக்கப்படும் புதிய மின்சார டபுள் டெக்கா் பேருந்துகளை வாங்க, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் டபுள் டெக்கா் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இந்தப் பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில், பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, தாம்பரம் - பிராட்வே இடையே 18ஏ என்ற எண்ணில் டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகள் காரணமாக 2008 ஆம் ஆண்டு இந்த சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது, தனியார் நிறுவனம் சார்பில் டபுள் டெக்கர் சோதனைப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி பரிசோதிக்கப்பட்டு, பிறகு, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் வாங்கி இயக்கப்படவிருக்கிறது.
இதன் மூலம் சென்னைப் பொதுப் போக்குவரத்தில் மிக முக்கிய மாற்றம் ஏற்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?