‘டிட்வா’ புயல் கனமழை எச்சரிக்கையால் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 18 விமானங்களும், அதேபோல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 18 விமானங்களும் என 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் சென்னையில் இருந்து கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை முதல் இயக்கப்பட வேண்டிய 5 விமான சேவைகளும், பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டிய 2 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயண விவரங்களை அறிந்து கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
டிட்வா புயல், கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரியில் இன்று விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் நேற்று விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?