சொத்து !

சொத்து !


நீ எழுதி எழுதி என்ன சாதித்தாய் என்றார்கள் பலர் !


என் உணர்வுகளை எழுத்துருவில் வெளிப்படுத்தியதால் மனதில் நிம்மதி அடைந்தேன் என்றேன் நான் !


என்ன சம்பாதித்தாய் என்றார்கள் !


நட்பும், சுற்றமும் என்னை வாழ்த்துவதே என் சம்பாத்தியம் என்றேன் !


எத்தனை சொத்து சேர்த்தாய் என்றார்கள் !


என் குடும்பம் வாழ உழைக்கின்றேன் அதுவே போதும் என்றேன் !


இதோ இக்காணும் அடுக்குமாடி குடியிருப்பும், இந் நிலமும், உயர்ரக வாகனம் அனைத்தும் என் சொந்தம் ,ஏழேழு பரம்பரைக்கும் எனக்கு சொத்து இருக்கிறது என்றார்கள் !


நான் சிரித்தேன் !


அது உம் சொத்தல்ல உம் பரம்பரையால் உமக்கு வந்த சொத்து !

உமக்காக சொத்தை ஈட்டியவர்களும் மண்ணில் மாய்த்து விட்டார்கள் !

இது என் சொந்தம் என்ற நீங்களும், நானும் இந்த சிறு கைப்பிடி அளவு மண்ணுக்குதானே சொந்தமாகப் போகிறோம் !


வாழும் சிறு வாழ்க்கையில் ஏதேனும் படைத்து விட்டுப் போவதில் நான் நிம்மதி ! காண்கிறேன் எனக்கு அந்த சொத்தே போதும் என்றேன் !


--------------------------------------

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%