
புதுடெல்லி, செப்.18-–
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமுலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 2 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரம் அதிக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் (சி.ஜி.எஸ்.டி.) விகிதங்களை பின்பற்றி மாநில அரசும் (எஸ்.ஜி.எஸ்.டி.) விகிதங்களை அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?