news Breaking News
clock

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: மதுரையில் பார்வையாளர்கள் வராமல் வெறிச்சோடிய அரங்குகள்!

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: மதுரையில் பார்வையாளர்கள் வராமல் வெறிச்சோடிய அரங்குகள்!


 

மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை காண பார்வையாளர்கள் வராமல் நேற்று பெரும்பாலான கேலரிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


டிக்கெட் விநியோகம் செய்வதில் நீடிக்கும் குளறுபடிகளுக்கு தீர்வு காணவும், பார்வையாளர்களை வரவழைக்கவும் ஹாக்கி சம்மேளனம் நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 6 பிரிவுகளில் 24 வெளிநாட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.


கடந்த 2-ம் தேதி மதுரையில் நடந்த போட்டியில் இந்திய அணி, சுவிட்சர்லாந்த்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி விளையாடியதால் இந்த போட்டியைக் காண, ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் அதிகளவில் கூட்டம் திரண்டதால் பலர் பாஸ் கையில் வைத்திருந்தும் போட்டியை பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.


இந்நிலையில் நேற்று காலை மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் ஆஸ்திரியா-நமீபியா அணிகளும், அதன்பிறகு வங்காளதேசம்-ஓமன் அணிகளும் விளையாடின. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேலரி பகுதிகள் பார்வையாளர்கள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டன.


போட்டியை பார்க்க கூட்டம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு பார்வையாளர்களாக அமர வைக்கப்பட்டனர்.


பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெரும்பாலும் போட்டியை பார்க்க வரவில்லை. டிக்கெட் கிடைப்பதில் நீடிக்கும் குளறுபடிகள், ஹாக்கி சம்மேளனம் மற்றும் போலீஸ் கெடுபிடிகள், போன்றவற்றால் போட்டியைக் காண பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தற்போது ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News