காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், கொரியன் கேமுக்கு அடிமையாகியிருந்த மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
பத்து நாள்களுக்கு முன்பு 3 சகோதரிகளுக்கும் அவர்களது தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, இவர்கள் நடத்தி வந்த யூடியூப் சேனல் டெலீட் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே, இவர்களது தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரியன் நாடகங்களை மையமாகக் கொண்டும், கார்டூன்களைப் பற்றியும் இந்த சகோதரிகள் யூடியூப் சேனல் தொடங்கி விடியோக்களைப் பதிவேற்றி வந்துள்ளனர். இது பற்றி தந்தை அறிந்து, கடுமையாக திட்டியிருக்கலாம், கொரிய கலாசாரத்துடன் ஐக்கியமாகும் தங்களது மகள்களைப் பற்றி கவலைப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பலியான நிஷிகா (16), பிரச்சி (14), பாக்கி (12) என்ற 3 சகோதரிகள், கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் கொரிய நாடகங்களுக்கு அடிமையாகி, கேமிங் விளையாட்டுகளில் முழுமையாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை, தங்கள் வீடு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
வீட்டின் பால்கனி வழியாக ஒருவருக்குப் பின் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தற்கொலைதான் என்பதை உடல்கூராய்வும் உறுதி செய்திருக்கிறது.
முதற்கட்ட விசாரணையின்போது, மூவரும் கொரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்ததாக அவர்களது தந்தை சேத்தன் குமார் கூறியுள்ளார்.
எல்சா, சின்ரெல்லா கதாபாத்திரங்களைப் போல இவர்கள் அவ்வப்போது மேக்கப் போட்டுக் கொண்டு புகைப்படங்கள், ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றியிருக்கிறார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?