இருள் லேசாக கவிந்த வேளை,
பொன் நிலவு வானிலே திரை நீக்குது.
தாழம்பூ மேனி, தங்கமாய் மின்னுது! தண்னென்ற பூங்காற்று மேனியை செல்லமாய் வருட... சிரமுயர்த்தி சிறு புன்னகை தேக்கி, பூங்கரமுயர்த்தி,
கனிகளைக் கொய்யுதோர் செம்மாங்கனி!
இடையிலே துவளும் பட்டாடை, இதழிலே நெளிகின்ற சிறு நகை
அலையலையாய் கொஞ்சுகிற கேசக்குழல். அடக்கியிட்ட கொண்டைதனில் சுற்றியுள்ள மல்லிகை..!
என் மனதை மயக்குதேடி! நிழற் படம் எடுக்கத் தான் வந்தேன், அடி என் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாய் நிஜமாய்!
தோள் சேரும் நேரம் சொல்லடி தோழி, ஆவி அழியாமல் வாழ!
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%