தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அரசு டெண்டர் வெளியீடு

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அரசு டெண்டர் வெளியீடு



சென்னை: தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையி லான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அகழாய்வு பணிகள் மூலம் தமிழர் நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்து சொல்வது மட்டுமல்லாமல், இந்த தலைமுறையும் அதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருங்காட்சியகங்களை யும் அமைத்து வருகிறது தமிழ்நாடு அரசு. கீழடி அருங்காட்சியகம், பொருநை ஆற்றங்கரை யில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் சான்றுகளை கொண்டு பொருநை அருங்காட்சியகம் ஆகியவற்றை அண்மையில் திறந்து வைத்த முதலமைச்சர், தென்னிந் தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட் களைப் பாதுகாக்கும் வகையிலும் ரூ. 51 கோடியில் தஞ்சை மாநகரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டார். இதற்கு முறைப்படி தமிழ்நாடு அரசு டெண்டர் வெளி யிட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடத்தப்பட்ட அக ழாய்வுகளில் வெண்கலம், தங்கம், செம்பு, இரும்பு என பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட தொல்பொ ருட்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%