தமிழகத்தில் அதிகமாக நடைபெற்றுவரும் ‘இ-செலான்’ மோசடிகள்: சைபர் குற்றப்பிரிவு அலர்ட்

தமிழகத்தில் அதிகமாக நடைபெற்றுவரும் ‘இ-செலான்’ மோசடிகள்: சைபர் குற்றப்பிரிவு அலர்ட்

சென்னை:

தமிழகத்​தில் இ-செலான் மோசடி அதி​கம் நடை​பெறு​வ​தாக சைபர் குற்​றப்​பிரிவு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.


இது தொடர்​பாக தமிழக சைபர் குற்​றப்​பிரிவு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் சமீப​கால​மாக 2 வகை​யான சைபர் மோசடிகள் அதி​கம் நடை​பெறு​வது கண்​டறியப்​பட்​டுள்​ளது.


வாக​னங்​கள் விதி​முறை மீறி​னால் இ-செலான்​களை வாட்ஸ்-அப் மூல​மாக அரசின் எந்த துறை​யும் அனுப்​புவது கிடை​யாது. ஆனால், மோசடி கும்​பல் வாட்ஸ்-அப் மூலம் போலி இ- செலான்​களை அனுப்​பு​கிறது.


இதன்​மூலம் மோசடி நபர்​கள், பொது​மக்​களிடம் வங்​கிக் கணக்​கு​களின் விவரங்​களை​யும், ஒரு​முறை மட்​டுமே பயன்​படுத்​தக் கூடிய ரகசிய எண்​ணை​யும் பெற்று பணத்தை அபகரிக்​கின்​றனர்.


பொது​மக்​கள் இப்​படிப்​பட்ட மோசடி​யில் சிக்​காமல் இருக்க, அரசின் அதி​காரபூர்வ இணை​யதளங்​களுக்கு சென்று தங்​களது வாக​னம் போக்​கு​வரத்து விதி​முறை​யில் ஈடு​பட்​டுள்​ளதற்​காக வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளதா என பார்த்து தெளிவுப்​படுத்தி கொள்ள வேண்​டும்.


இது​போன்ற மோசடி சம்​பவங்​கள் அதி​கள​வில் நடை​பெறுகிறது. இதே​போல சைபர் குற்​றத்​தில் பணத்தை இழந்தவர்​களுக்கு உதவுவது​போல நாடக​மாடி பணத்தை பறிக்​கும் மற்​றொரு மோசடி சம்​பவங்​களும் நடை​பெறுகிறது. இதற்​காக மோசடி நபர்​கள், சமூக ஊடகங்​களில் சைபர் உதவி மையம் என்ற பெயரில் போலி​யான விளம்​பரம் செய்​து, பொது​மக்​களை தொடர்பு கொள்ள வைக்​கின்​றனர்.


பொது​மக்​கள் தொடர்பு கொள்​ளும்​போது, மோசடி நபர்​கள் சைபர் குற்​றப்​பிரிவு அதி​காரி​கள், சட்ட ஆலோ​சகர்​கள் எனக்கூறி பேசுகின்​றனர். சைபர் குற்​றத்​தில் இழந்த பணத்தை மீட்க கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் எனக்கூறி பணத்தை பறித்​துக் கொண்டு தலைமறை​வாகி விடு​கின்​றனர்.


எனவே, பொது​மக்​கள் சைபர் குற்​றம் தொடர்​பாக புகார் அளிக்க, சைபர் குற்​றப்​பிரிவை 1930 என்ற அதி​காரபூர்வ இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்​ளலாம். தெரி​யாத செல்​போன் எண்​கள், வாட்​ஸ்-​அப், சமூக ஊடகங்​கள் வாயி​லாக சட்ட ஆலோ​சகர், சைபர் குற்​றப்​பிரிவு அதி​காரி எனக் கூறும் நபர்​களை நம்பி ஏமாற வேண்​டாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%