தமிழக அரசின் சிறந்த உணவகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

தமிழக அரசின் சிறந்த உணவகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

கிருஷ்ணகிரி, ஆக. 14–


உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை பின்பற்றி நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்கும் வருடாந்திர விற்று கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கும் மேற்பட்ட பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்று அது நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருநபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் தொற்றுநோய் தாக்கமற்றவர்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்ட்ட நிறுவனம் மூலம் சுகாதார தணிக்கை மேற்கொண்டு சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும்.


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் வணிக வகைக்கான தணிக்கை மேற்கொண்டு அறிக்கை வைத்திருக்க வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு அதை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து உணவு வணிகர்களும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை தவிர்த்து மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை பயன்படுத்தி, சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்த உதவிடும் வகையில் உணவு பாதுகாப்புத்துறையின் விருதை வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


மேலும், இதற்குரிய விண்ணப்பங்களை மாவட்ட நியமன அலுவலர், மாவட்ட நியமன அலுவலகம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அறை எண்: 107, இரண்டாம் தளம், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி (தொலைபேசி எண்:04343-230102) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%