திருக்கோவில் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் - சேகர்பாபு வழங்கினார்

திருக்கோவில் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் - சேகர்பாபு வழங்கினார்


இந்த ஆட்சி உபயதாரர்கள் நிதியை முழுமையாக, அவர்கள் விருப்பப்படி, திருக்கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஆட்சி என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,


திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கான சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-


“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (03.10.2025) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் 2024- 25 ஆம் கல்வியாண்டில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 2 பெண்கள் உள்பட 89 மாணவர்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என ஆக மொத்தம் 108 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது;-


திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அர்ச்சகர் பயிற்சி பள்ளி, ஓதுவார் பயிற்சி பள்ளி, தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளி, வேத ஆகம பாடசாலைகள், 4000 திவ்ய பிரபந்தம் பயிற்சி பள்ளிகள் என 21 பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு, இந்த பயிற்சி பகுதிகளுக்கு உண்டான தகுதியுள்ள ஆசிரியர்கள் நியமிக்கபட்டு, தொடர்ந்து இந்த பயிற்சி பள்ளிகள் சிறப்போடு திராவிடமான வளர்ச்சியுடன் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த பயிற்சி பணியுடைய ஆரம்பகால ஊக்கத் தொகை ரூ.500 என்று 2007 ஆம் ஆண்டில் இருந்ததை, 2021 ஆம் ஆண்டு வரை வெறும் ரூ.1,000 என்ற அளவில்தான் வழங்கியிருந்தது. தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன், 2021–22 ஆம் ஆண்டில், முழுநேர பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு ரூ.3,000 மற்றும் பகுதிநேர பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு ரூ.1,500 ஊக்கத் தொகையாக அறிவித்தார்.


அடுத்த ஆண்டான 2023-இல், அந்த ரூ.3000 ஊக்கத் தொகையை ரூ.4,000 ஆகவும், ரூ.1,500ஐ ரூ.2,000 ஆகவும் உயர்த்தி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, இந்த பயிற்சி பள்ளியில் பயில்கின்ற மாணவர்களுக்கு உணவு, சீருடை, தங்குமிட வசதியோடு, முழுநேர பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 பகுதிநேர மாணவர்களுக்கு ரூ.5,000 அன்று வழங்கி உள்ளார். இந்த பயிற்சி பணியில் பயில்கின்ற மாணவச் செல்வங்களுக்கு இன்றுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்கள் எண்ணிக்கை — 2021 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 213 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதோடு மட்டுமல்லாது, ஓதுவார்கள் நியமனம் — இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 43 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் ஓதுவார்கள் மட்டும் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த பயிற்சி பள்ளிகளை மேலும் விரிவுபடுத்தவும், மாணவச் செல்வங்களுக்கு பணியிடங்களை ஏற்படுத்தவும், பல்வேறு நீதிமன்றப் போராட்டங்களுக்கு பிறகு ஆகம திருக்கோயில்களை நிர்ணயிக்க உடைய குழுக்களின் இறுதி வடிவம் உச்சநீதிமன்ற தீர்ப்பால் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆகமக் குழுவான ஐவர் குழுவின் கூட்டம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் விரைவில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 3,707 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்குள் 4,000 என்பதைத் தொடும் என்று நம்பிக்கை உள்ளது. நில மீட்பு குறித்து எடுத்துக்கொண்டால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ரூ.8,015.80 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன், இந்து சமய அறநிலைத்துறை நிலங்களை அடையாளப்படுத்தும் பணிக்காக “HRCE” என்ற எல்லைக் கற்கள் பதிக்கப்படும் பணிகள் துவக்கப்பட்டு, இதுவரை 1,41,820 எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%