திருட்டு வழக்கில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ - சிஆர்பிஎப் பெண் காவலர் கண்ணீர் வீடியோவால் சலசலப்பு
Aug 07 2025
164
காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள், பட்டுப்புடவை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வரும் மத்திய ரிசர்வ் காவல் படையின் பெண் காவலர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை காவலராக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து கண்ணீருடன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘காட்பாடி அடுத்த நாராயண புரத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் பூட்டை உடைத்து நகை, பட்டுப்புடவையை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜூன் 28-ம் தேதிதான் வழக்குப்பதிவு செய்தனர். எனது திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகையை திருடிச்சென்றுவிட்டனர். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?