தூத்துக்குடியில் மின்சார பேருந்து உற்பத்தி: வின்ஃபாஸ்ட் திட்டம்
Dec 03 2025
57
சென்னை: மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடி ஆலையில் மின்சார பேருந்துகளை தயா ரிக்க திட்டமிட்டுள்ளது. ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் அமைக்கப் பட்ட வின்ஃபாஸ்ட் ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார். இது வரை மின்சார கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த இந்த ஆலையில், இனி மின்சார பேருந்துகளும் தயாரிக்கப்படும். 6 முதல் 12 மீட்டர் நீளமுள்ள மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 281 kWh பேட்டரி திறனுடன் ஒரே சார்ஜில் 260 கி.மீ. பய ணிக்கும் திறன் கொண்ட இந்த பேருந்துகள், தற்போது வியட்நாம் மற்றும் ஐரோப்பாவில் விற்பனையில் உள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?