தொழில்துறை எரிசக்தி திறனில் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக 55.3% பெற்று உச்சம் தொட்டது தமிழ்நாடு

தொழில்துறை எரிசக்தி திறனில் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக 55.3% பெற்று உச்சம் தொட்டது தமிழ்நாடு



தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் உச்சம் பெற்று மாநில ஆற்றல் திறன் குறியீடு 2024–ன் குழு–1 இல் 55.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தொழில்துறை எரிசக்தித் திறனில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் எனத் திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆந்திரப்பிரதேசம் அளவீட்டுக் குறியீடுகளின்படி, நாட்டின் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்து, 27.5% முன்னேற்றத்தைப் பதிவு செய்து, இரண்டாம் குழுவில் முன்னிலை வகிக்கிறது. 23.1% வளர்ச்சி பெற்று ஒடிசா, 28.8% வளர்ச்சி பெற்று சத்தீஸ்கர், 16.5% வளர்ச்சி பெற்று மத்தியப் பிரதேசம் 10.9% வளர்ச்சி பெற்று திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களும் வலுவான முன்னேற்றத்தைப் படைத்துள்ளன.


முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தன்மையுடன் கூடிய முயற்சிகளின் பயனாக குழு 1–ல் உள்ள தமிழ்நாடு, கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.


ரூ. 2.6 கோடி முதலீடு


தமிழ்நாட்டின் PEACE திட்டம் வாயிலாக 2023-–24ஆம் ஆண்டில் விழிப்புணர்வு, பயிற்சி, எரிசக்தி தணிக்கை மானியங்கள் ஆகியவற்றுடன் செயல்படுத்தல் முயற்சிகளுக்காக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான ஆற்றல் திறன்களுக்காக மொத்தம் 2.6 கோடி ரூபாய் முதலீடு செய்து ஊக்கப்படுத்தியுள்ளது.


எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 25 மாநிலங்கள் எரிசக்தி பாதுகாப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. விருதுகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகியவை முன்னணியில் உள்ளன. அடுத்த நிலையில் குஜராத் இடம்பெற்றுள்ளது.


தொழில்துறை எரிசக்தி செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ள மாநிலங்கள் வரிசைப்படி –


1 தமிழ்நாடு – 55.3%


2 சத்தீஸ்கர் – 29%


3 ஆந்திரப் பிரதேசம் – 26%


4 ஒடிசா – 23%


5 மத்தியப் பிரதேசம் – 17%


6 திரிபுரா– 11%


இந்நிலையில் ஒன்றிய அரசினுடைய ஆய்வறிக்கைகள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகின்றன. செய்தி ஊடகங்களும், செய்தி ஏடுகளும் கூட இந்த உண்மையை வெளிப்படுத்தி தமிழ்நாட்டையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%