
என்னோடு நீ பேச வேண்டாம்…
பேசுவாய் என்ற நம்பிக்கை போதும்.
என்னை நீ சந்திக்கவே வேண்டாம்…
சந்திக்க அனுமதி கேட்டால் மறுக்க மாட்டாய் என்பதே போதும்.
நாம் என்றும் சேரவே மாட்டோம் எனக்கு தெரியும்.
ஆனால் சேர்ந்தே இருக்கிறோம் —
ஒரே காற்றை சுவாசிக்கிறோம், ஒரே பூமியில் வாழ்கிறோம்.
இது எல்லாவற்றையும் விட —
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
மாலை நேர இளம் காற்றில், கடற்கரை சாலையில்,
லேசான மழை சாரலில், யாரோ யாரோடு பேசுகையில்,
என் பெயரை யாரோ அழைக்கையில் —
நீ என்னை கண்டிப்பாக நினைப்பாய்…
இது நம்பிக்கை இல்லை — நீ என்னருகே இல்லாத போதும்
உன் இருப்பை உணர்த்தும் நிதர்சனம்.
---
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?