நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஆக. 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். உடன் துறை செயலாளர் ப.செந்தில்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர்.

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்​கப்​படு​கிறது. குடி​யிருப்பு பகு​தி​களின் அரு​கிலேயே இலவச​மாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்​ளலாம். சென்னை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் மேல்​நிலைப்​பள்​ளிவளாகத்​த​தில் “நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வ​ரால் தொடங்​கப்​பட​வுள்​ளது.


இதையொட்​டி, பள்ளி வளாகத்​தில் முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில் குமார், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.


அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நலம் காக்​கும் ஸ்டா​லின் எனும் திட்​டம் மக்​களை தேடி முழு உடல் பரிசோதனை திட்​டம் என்​கின்ற வகை​யில் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்​பது தனி​யார் மருத்​து​வ​மனை​களுக்கு சென்​றால் ரூ.15 ஆயிரம் வரை செல​வாகும். முழு உடல் பரிசோதனை என்பது இன்​றைய கால​கட்​டத்​தில் மக்​களுக்கு மிக​வும் அவசி​ய​மான ஒன்​றாகும். நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டத்தை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வர் தொடங்கி வைக்​கிறார்.


இந்த திட்​டத்​தில் பொது மருத்​து​வம், பொது அறுவை சிகிச்​சை, எலும்​பியல் மருத்​து​வம், மகப்​பேறி​யியல், மகளிர் மருத்​து​வம், குழந்தை மருத்​து​வம், இதயவியல், நரம்​பியல் மருத்​து​வம், தோல் மருத்​து​வம், பல் மருத்​து​வம், கண் மருத்​து​வம், காது மூக்கு தொண்டை மருத்​து​வம், மனநல மருத்​து​வம், இயன்​முறை மருத்​து​வம், நுரை​யீரல் மருத்​து​வம் மற்​றும் இந்​திய முறை மருத்​து​வம் ஆகிய அனைத்​தும் இடம்​பெறுகிறது.


அனைத்து தரப்பு மக்​களுக்​கும் ஒவ்​வொரு சனிகிழமை​யிலும், காலை 9 முதல் மாலை 4 மணிவரை அவர​வர் குடி​யிருப்பு பகு​தி​கள் சார்ந்தே முகாம் நடத்​தப்​படும். இதற்​கான அறி​விப்​பு, துண்டு பிரசுரங்​கள் மூல​மாக அப்​பகுதி மக்​களுக்கு தெரியப்​படுத்​தப்​படும்.


இதே முகாமில் மாற்​றுத்​திற​னாளி​கள் பரிசோ​திக்​கப்​பட்​டு, எத்​தனை சதவீதம் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது என்​ப​தற்​கான சான்​றிதழ் வழங்​கப்​படும். புதிய காப்​பீடு திட்​டத்​தில் இணைவதற்​கும் மு​காமில் விண்​ணப்​பிதற்​கான வசதி ஏற்​படுத்​தப்​படும். இதற்​காக, மாநிலம் முழுதும், 1,256 மு​காம்​கள்​ நடத்​தப்​படும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%